×

“இப்போதும் எக்மோவிலேயே இருக்கும் எஸ்பிபி” -சரண் சொன்ன தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி க்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சியளிக்கப்பட்டு வருகிறது .இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து அவரின் மகன் சரண் தினமும் சமூக ஊடகத்தில் தகவல் வெளியிட்டு வருகிறார் எஸ்பிபி க்கு சென்ற வாரம் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் எக்மோ சிகிச்சையும் ,வெண்டிலேட்டர் சிகிச்சையும் அளிக்கப்பட்டது .இதனால் திரையுலகினர் கூட்டு பிராத்தனை செய்ததில் அவருக்கு நினைவு திரும்பியது .மேலும் டாக்டர்களும் வெளிநாட்டு ,மருத்துவர்களோடு ஆலோசனை நடத்தி அவருக்கு சிகிசையளித்து வருகிறார்கள்
 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி க்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சியளிக்கப்பட்டு வருகிறது .இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து அவரின் மகன் சரண் தினமும் சமூக ஊடகத்தில் தகவல் வெளியிட்டு வருகிறார்


எஸ்பிபி க்கு சென்ற வாரம் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் எக்மோ சிகிச்சையும் ,வெண்டிலேட்டர் சிகிச்சையும் அளிக்கப்பட்டது .இதனால் திரையுலகினர் கூட்டு பிராத்தனை செய்ததில் அவருக்கு நினைவு திரும்பியது .மேலும் டாக்டர்களும் வெளிநாட்டு ,மருத்துவர்களோடு ஆலோசனை நடத்தி அவருக்கு சிகிசையளித்து வருகிறார்கள் .இந்நிலையில் நேற்று அவருக்கு பிசியோதெரபி சிகிசையளிக்கப்ட்டது .
இன்று அவரின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட அவரின் மகன் சரண் ,எஸ்பிபி க்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ,அவரின் நுரையீரல் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ,அவர் சுயநினைவோடு இருப்பதாகவும் ,தங்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ,இருந்தாலும் அவருக்கு எக்மோ சிகிச்சையும் ,வெண்டிலேட்டர் சிகிச்சையும் தொடர்ந்து தரப்படுவதாகவும் ,நோய் தொற்று ஏற்படாமல் அவருக்கு அதி நவீன சிகிச்சைகள் தரப்படுவதாகவும் ,அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் .