×

எஸ்.பி.பி. நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் தாமரைப்பாக்கம் பண்ணைவீடு

பாடகர் எஸ். பி. பி. யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள பண்ணை வீட்டில் முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் காலமானார். இவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. இதையடுத்து எஸ். பி. பி. யின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்வதற்காக,
 

பாடகர் எஸ். பி. பி. யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள பண்ணை வீட்டில் முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் காலமானார். இவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

இதையடுத்து எஸ். பி. பி. யின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்வதற்காக, ஜேசிபி இயந்திரம் கொண்டு முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தினை சம தளப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.