விரைவு ரயிலில் தவறி விழுந்து தாயின் கண்முன்னே மகன் துடிதுடித்து உயிரிழந்த மகன்!
சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயிலில் தவறி விழுந்து தாயின் கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இருந்து பிரதீப் என்ற இளைஞர் தனது தாய் மற்றும் அத்தைகளுடன் திருவள்ளூர் மாவட்டம் திருவல்லங்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி விரைவு விரைவில் பயணம் செய்து அரக்கோணம் ரயில் நிலையத்தை வந்து அடைந்தனர். இதில் இவர்கள் கொண்டு வந்த பை ஒன்று காணாமல் போனதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிரதிப் ரயில் புறப்படும் முன்பு முன்பதிவு இல்லா பட்டியில் சென்று தனது பை இருக்கிறதா என்று பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது ரயில் எடுப்பதற்கான ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிரதீப் ஓடிச் சென்று ரயில் உள்ளே ஏற முயன்ற போது தவறி நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தாய் மற்றும் அத்தை என அனைத்து உறவினர்கள் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்டர்சிட்டி விரைவு ரயில் ஆனது அரை மணி நேரம் காலதாமலமாக புறப்பட்டு சென்றது. மேலும் பிரதீப்புக்கு திருமணமாகி நான்கு ஆணடுகள் ஆகிறது இவருக்கு குழந்தைகள் யாரும் இல்லை பெற்ற தாய் கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.