×

சிவசங்கர் பாபா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

2வது போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சிவசங்கர் பாபா நடத்தி வந்த கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபா சிறையில்
 

2வது போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சிவசங்கர் பாபா நடத்தி வந்த கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல்  பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அவரின் இமெயில் முடக்கப்பட்டது.

இந்நிலையில் சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவின் கீழ் சிபிசிஐடி போலீசார் மாற்றிய நிலையில் அவர் இன்று 2வது போக்சோ வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதுவரை 18 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில் சிவசங்கர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.இதனிடையே சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக யாஹூ ஈமெயில் மூலம் ஆபாசமாக மாணவிகளிடம் சாட் செய்து வந்ததற்கான ஆதாரம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.