×

“சிவசங்கர் பாபாவை சிறைக்கு அனுப்பி அவரது சொத்துக்களை அபகரிக்க முயற்சி”

சம்ரட்சனா அட்மின் ஜானகியை விசாரித்தால் சிவசங்கர் பாபா மீது பதியப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பல திருப்பங்கள் தெரியவரும் என நடிகரும், சிவசங்கர்பாபா ஆதரவாளருமான சண்முகராஜா தெரிவித்துள்ளார். சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தின் தலைவருமான சண்முகராஜா, “ஜானகி சீனிவாசன் சாதிய மனோபாவம் கொண்டவர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாபா மீது பக்தியுடன் இருந்த அடித்தள மக்களை விரட்டி அடிப்பது, பள்ளி
 

சம்ரட்சனா அட்மின் ஜானகியை விசாரித்தால் சிவசங்கர் பாபா மீது பதியப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பல திருப்பங்கள் தெரியவரும் என நடிகரும், சிவசங்கர்பாபா ஆதரவாளருமான சண்முகராஜா தெரிவித்துள்ளார்.

சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தின் தலைவருமான சண்முகராஜா, “ஜானகி சீனிவாசன் சாதிய மனோபாவம் கொண்டவர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாபா மீது பக்தியுடன் இருந்த அடித்தள மக்களை விரட்டி அடிப்பது, பள்ளி மாணவர்களை சித்ரவதை செய்வது, அவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து அனுப்புவது, அனைத்து பணிகளிலும் ஊழல் செய்து கமிஷன் அளிப்பது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். நிர்வாகி ஜானகியின் அத்தனை செயல்களுக்கும் பாஜகவை சேர்ந்த கே.டி ராகவன் துணையாக இருக்கிறார். தற்போது சிவசங்கர் பாபா சிறையில் இருக்கும் சமயத்தில் ஜானகியின் ஆட்கள், பிராமணர் அல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து, பாபாவின் கோவில்களை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

தட்டிக் கேட்ட பெண்மணியினரை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கேடி ராகவன் அடியாட்கள் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை கைப்பற்றுவதற்காக சிவசங்siபாபா மீது பொய் வழக்குகளை ஜோடித்துள்ளனர். ஜானகியின் உத்தரவில்லாமல் வளாகத்தில் அணுவும் அசையாது அப்படி இருக்கையில் ஜானகியையும், அவரது கூட்டாளிகளும் கைது செய்து விசாரித்தால் புதிய திருப்பங்கள் உருவாகும்” என தெரிவித்தார்.