×

‘கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை ஐ-பேடில் பார்க்கிறார் எஸ்பிபி’..மகன் சரண் தகவல்!

பிரபல பாடகர் எஸ்பிபி கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 5 ஆம் தேதி கொரோனா தொற்றுக்கு ஆளானார் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம். உடனே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆரம்பகட்டத்தில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தானே வீடியோ வெளியிட்ட எஸ்பிபி, கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்த செய்தி கோடான கோடி மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. பாடும்
 

பிரபல பாடகர் எஸ்பிபி கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் 5 ஆம் தேதி கொரோனா தொற்றுக்கு ஆளானார் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம். உடனே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆரம்பகட்டத்தில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தானே வீடியோ வெளியிட்ட எஸ்பிபி, கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்த செய்தி கோடான கோடி மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

பாடும் நிலா எழுந்து வா என நடிகர் ரஜினி காந்தும், சீக்கிரமா வா பாலு நாம சேந்து பாட்டுக்களை படுவோம் என இசைஞானி இளையராஜாவும், தன்னுடைய முதல் பாடலை பாடிய நீங்கள் தான் கடைசி பாடலையும் பாட வேண்டும் என கவிஞர் வைரமுத்துவும் கண் கலங்கி வீடியோ வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்பதற்காக திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட கோடானக்கோடி மக்கள் பிரார்த்தனை செய்தனர். அதன் விளைவாக எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாக அவரது மகன் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் எஸ்பிபி கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக, சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்து விட்டதாகவும், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று குணமடைய சிறிது காலம் ஆகும் என்பதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளை ஐ-பேடில் அவர் பார்ப்பதாகவும் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.