×

‘என் கணவனை காப்பற்றுங்கள்’.. சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் பால்துரையின் மனைவி தர்ணா!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் படி முதற்கட்டமாக 5 காவலர்கள், கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் இந்த வழக்கு சிபிஐ போலீசாரிடம் மாற்றப்பட்ட நிலையில், கைதான காவலர்கள் எல்லாரையும் அதிகாரிகள் தனித்தனியாக காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் படி முதற்கட்டமாக 5 காவலர்கள், கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

அதன் பின்னர் இந்த வழக்கு சிபிஐ போலீசாரிடம் மாற்றப்பட்ட நிலையில், கைதான காவலர்கள் எல்லாரையும் அதிகாரிகள் தனித்தனியாக காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இதனிடையே சிபிஐ போலீசார் விசாரணையின் போது எஸ்ஐ பால்துரைக்கும், காவலர் முத்துராஜுக்கும் கொரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து 4 சிபிஐ அதிகாரிகளுக்கும் அவர்களுக்கு உதவிய மதுரை அதிகாரிக்கும் கொரோனா உறுதியானது. இதனால் இந்த வழக்கு விசாரணை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா உறுதியான எஸ்ஐ பால்துரை சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், பால்துரையை காப்பாற்றுமாறு அவரது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.