"கால்வாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி விரைந்து அமைக்க வேண்டும்" - அன்புமணி வலியுறுத்தல்!!
Oct 22, 2022, 11:05 IST
சென்னை மாநகராட்சி கால்வாய் அமைக்கும் பணிகளையும், இணைப்பு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையாததால், கடந்த சில நாட்களில் பெய்த மழை நீர் தேங்கி அவை ஆறு போல காட்சியளிக்கின்றன. மற்ற பகுதிகளிலும் மழை நீர் வடிய தாமதம் ஆகிறது! மழைநீர் வடிகால் பணிகளில் 95% முடிந்து விட்டதாக மேயரும், 70% நிறைந்து விட்டதாக மாநகராட்சியும் கூறினாலும் கூட, பெரும்பான்மையான இடங்களில் துண்டு துண்டாக அமைக்கப்பட்ட கால்வாய்கள் இன்னும் இணைக்கப்படவில்லை. தண்ணீர் வடியாததற்கு அது தான் முக்கிய காரணம்!