×

காலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! அரசு மருத்துவமனைக்குள் பெண் படுகொலை! 

 

கரூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் விஷ்ரூத். இவரது மனைவி ஸ்ருதி. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் மனைவியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அந்த பெண் குளித்தலை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அதிகாலை மனைவி ஸ்ருதியை பார்ப்பதற்காக விஷ்ரூத் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ருதியின் உடம்பில் சரமாரியாக குத்தி விட்டு அங்குகிருந்து தப்பிச்சென்றார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலையை பார்த்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய விஷ்ரூத்தினை வலைவீசி தேடி வருகின்றனர். விஷ்ரூத் - ஸ்ருதி தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.