பெண்ணுக்கு பாலியல் தொலை - கட்சியிலிருந்து தவெக நிர்வாகி நீக்கம்
தேனி மாவட்டம் கம்பத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெகவை சேர்ந்த பாபு என்ற நிர்வாகி மீது பெண்கள் பாலியல் தொந்தரவு தடுப்பு சட்டம் 1998 பிரிவு 4 இன் கீழ் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கம்பம் மெட்டு காலணியை சேர்ந்த பாபு என்பவர் கம்பம் தெற்கு மாவட்ட தவெக நிர்வாகியாக உள்ளார். இவர் கம்பம் மசூதி தெருவை சேர்ந்த 24 வயது பெண்ணிடம் பாலியல் தொலை கொடுத்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தவெக நிர்வாகி பாபு என்பவர் மீது குற்ற எண். 333/2026. கீழ் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவு தடுப்பு சட்டம் 1998 பிரிவு 4 வழக்கு பதிவு செய்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பார்ந்த தேனி தெற்க்கு மாவட்ட கழக சொந்தங்களே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் கட்டுப்பாடு மற்றும் கட்சி தலைமையின் வழிகாட்டுதலுக்கு மாறாக செயல்பட்டு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் கம்பம் பகுதியைச் சேர்ந்த திரு கம்பம் பாபு அவர்கள் இன்று முதல் 24.06.2026 தேதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார். இதன்படி அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்சி சார்ந்த எந்த தொடர்பும் கொள்ளவேண்டாம் என தெரியப்படுத்திகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.