×

செந்தில் பாலாஜி வழக்கு - ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

 

செந்தில் பாலாஜி வழக்கில்  ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 
 

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த சூழலில்  செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு  ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்று சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் உள்பட 900 பேரை குற்றபத்திரிகையில் இணைத்துள்ள காரணத்தால், அரசிடமிருந்து அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.