×

புலவர் செந்தலை ந. கவுதமன் துணைவியார் மறைவு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல் 

 

பகுத்தறிவுச் சிந்தனையாளர்  செந்தலை ந. கவுதமன்  துணைவியார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பகுத்தறிவுச் சிந்தனையாளர் புலவர் திரு செந்தலை ந. கவுதமன் அவர்களின் துணைவியார் திருமதி உலகநாயகி அவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.

பகுத்தறிவும், தமிழும் தமது இரு கண்களெனப் போற்றி வாழ்ந்த உலகநாயகி அம்மையாரை இழந்து வாடும் திரு. செந்தலை ந. கவுதமன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், பெரியார் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.