×


இறையன்பு , சைலேந்திரபாபு இருவருக்கும் சீமான் பாராட்டு!! 

 

முனைவர்  இறையன்பு , சைலேந்திரபாபு இருவருக்கும் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக திறம்படச் செயலாற்றி பணி நிறைவுபெறும் ஐயா இறையன்பு அவர்களுக்கும், காவல்துறை தலைமை இயக்குநராக திறம்படச் செயலாற்றி பணி நிறைவுபெறும் ஐயா சைலேந்திரபாபு அவர்களுக்கும் எனது அன்பு நிறைந்த பாராட்டுகள்.

தமிழ்நாடு அரச நிர்வாகத்தின் உச்சப் பதவிகளில் ஒரேகாலத்தில்  இரண்டு தமிழர்கள் நேர்மையுடன், பலருக்கு முன்மாதிரியாக பணியாற்றினர் என்பதே உலகத்தமிழர்கள் பெருமைகொள்ள வேண்டிய வரலாற்று பெரும்பதிவாகும்.