×

செப். 1 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கபடும் நிலையில் சீருடை அல்லது அடையாள அட்டையுடன் பாஸ் இல்லாமல் மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் பள்ளி, கல்லூரிகளைத் திறந்துள்ளன. அதன்படி, தமிழக அரசும் நாளை மறுநாள் முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பள்ளி,கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளி, அரசுக் கல்லூரி,
 

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கபடும் நிலையில் சீருடை அல்லது அடையாள அட்டையுடன் பாஸ் இல்லாமல் மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் பள்ளி, கல்லூரிகளைத் திறந்துள்ளன. அதன்படி, தமிழக அரசும் நாளை மறுநாள் முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பள்ளி,கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளி, அரசுக் கல்லூரி, அரசு ஐடிஐ மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் புகைப்படத்துன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கப்படும் வரை, மாணவர்கள், தங்கள் அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் செல்லும் மாணவ, மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.