“திமுகவின் அழிவு தமிழகத்துக்கு நல்லது! அதை உதயநிதி விரைவில் செய்து முடிப்பார்”- சவுக்கு சங்கர்
முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும், கத்துவதும் 75 ஆண்டு வரலாறு உள்ள ஒரு கட்சிக்கு அழகா? என பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில், “ஒரு முதலமைச்சர். முதல் முறையாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கிறார். அவர் தனது உரையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லலாம். அவதூறுகளை கூட சொல்லலாம். ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் பேசி முடிக்கும் வரையில் காத்திருந்து, தனது பதிலுரையில் முதல்வர் தனது உரையில் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணத்துக்கு முதல்வர் விஜய் “Party Fund” வழங்கப்படாது என்று சொல்லியிருந்தால், உதயநிதி பேசுகையில் ‘Party Fund’ வாங்குவதாக முதல்வர் அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார். அவருடைய ஆட்சிதானே ! முடிந்தால் நிரூபிக்கட்டும். இப்படி அபாண்டமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது முதல்வருக்கு அழகல்ல’ என்று பேசியிருக்க வேண்டும்.
ஒரு முதலமைச்சர். முதல் முறையாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கிறார். அவர் தனது உரையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லலாம். அவதூறுகளை கூட சொல்லலாம்.
— Savukku Shankar (@SavukkuOfficial) June 23, 2026
ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் பேசி முடிக்கும் வரையில் காத்திருந்து, தனது… pic.twitter.com/SdBfCrYU02
அதை விடுத்து, முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும், கத்துவதும் 75 ஆண்டு வரலாறு உள்ள ஒரு கட்சிக்கு அழகா ? ஆனால் இதுதான் இவர்களது அசல் குணம். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்தது போல உதயநிதி நடந்து கொண்டு இருக்கிறார். நேரலை காரணமாக இவர்களின் நடத்தையெல்லாம் அம்பலமாகி கொண்டே இருக்கிறது. முற்று முழுவதுமாக மக்கள் விரைவில் இவர்களை நிராகரிப்பார்கள். திமுகவின் அழிவு தமிழகத்துக்கு நல்லது. அதை உதயநிதி விரைவில் செய்து முடிப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.