×

சாத்தான்குளம் காவலர் முத்துராஜை இரண்டு நாட்களில் பிடித்துவிடுவோம்! – ஐ.ஜி சங்கர் பேட்டி

சாத்தான்குளம் காவலர் முத்துராஜை இரண்டு நாட்களில் பிடித்துவிடுவோம்! – ஐ.ஜி சங்கர் பேட்டி சாத்தான்குளம் காவலர் முத்துராஜை இரண்டு நாட்களில் கைது செய்துவிடுவோம் என்று சிபிசிஐடி ஜ.ஜி சங்கர் உறுதியளித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர் முத்துராஜ் தலைமறைவாக உள்ளார். அதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர். இது குறித்து சிபிசிஐடி ஐ.ஜி
 

சாத்தான்குளம் காவலர் முத்துராஜை இரண்டு நாட்களில் பிடித்துவிடுவோம்! – ஐ.ஜி சங்கர் பேட்டி
சாத்தான்குளம் காவலர் முத்துராஜை இரண்டு நாட்களில் கைது செய்துவிடுவோம் என்று சிபிசிஐடி ஜ.ஜி சங்கர் உறுதியளித்துள்ளார்.


சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர் முத்துராஜ் தலைமறைவாக உள்ளார். அதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.

இது குறித்து சிபிசிஐடி ஐ.ஜி சங்கரிடம் கேட்டபோது, “சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் முத்துராஜ் இரண்டு நாட்களுக்குள் பிடிபடுவார். அவரை தீவிரமாகத் தேடி வருகிறோம். இந்த வழக்கு தொடர்பாக சம்பவம் நடந்த அன்று பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உறுப்பினர்களையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த வழக்கு தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சில முக்கியமான பதிவுகளும் கிடைத்துள்ளன. இந்த வழக்கை சிபிசிஐடி நியாயமான வகையில் விசாரித்து வருகிறது” என்றார்.