சசிகலா விடுதலை தேதியைக் கூற முடியாது! – கர்நாடக சிறைத்துறை பதில்
சசிகலா விடுதலையாகும் தேதி குறித்து உறுதியாக கூற முடியாது என்று கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
சசிகலா எப்போது விடுதலையாவார் என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் முக்கியமான விவாதங்களுள் ஒன்றாக உள்ளது. இப்போது வந்துவிடுவார், அப்போத வந்துவிடுவார் என்று பல தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சசிகலா வெளியே வர உள்ளதால்தான் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு எடுக்க அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்று பலர் கருத்து தெரிவித்தனர். செப்டம்பர் மாதம் விடுதலையாவர் என்று தமிழக சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தேதியைக் கணித்திருந்தார்.
இந்த பதிலில் அபராதம் செலுத்துவது பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தினாரா இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது