கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க-வில் இணைகிறார் சரத்குமார்! – பா.ஜ.க வட்டாரத்தில் மகிழ்ச்சி
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கட்சியைக் கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாவது என்று முடிவெடுத்துள்ளதாக பா.ஜ.க வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நடிகர் சரத்குமார் அ.தி.மு.க ஆதரவாக இருந்தார். பிறகு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக தி.மு.க-வில் இணைந்து எம்.பி-யானார். தயாநிதிமாறனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிறகு தி.மு.க-வில் இருந்து விலகினார். அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டோடு இருந்த அவர் சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் அவர் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.