காவலர்களின் துணையோடு அரங்கேறும் மணல் கொள்ளை!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிகளில் உயர்நீதிமன்றம் உத்தரவை மீறியும், டி.ஐ.ஜி அறிக்கையான மணல் கடத்தலை ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மதிக்காமல் கடந்த பத்து நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் காவல்துறை அதிகாரிகள் துணையோடு மணல் கொள்ளை நடைபெறுவதாக தமிழக நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் அண்ணாதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது போல்
Oct 23, 2020, 23:28 IST
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிகளில் உயர்நீதிமன்றம் உத்தரவை மீறியும், டி.ஐ.ஜி அறிக்கையான மணல் கடத்தலை ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மதிக்காமல் கடந்த பத்து நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் காவல்துறை அதிகாரிகள் துணையோடு மணல் கொள்ளை நடைபெறுவதாக தமிழக நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் அண்ணாதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது போல் மணல் கொள்ளைக்கு துணை போகும் காவல்துறை அதிகாரிகள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.