×

 மிக்ஜாம் புயல் பேரிடர்  - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரூ.10 லட்சம் நிதி!!

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் கே.பாலகிருஷ்ணன் .

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் திரு.பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.