கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு வேண்டும்! – டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை
கொரோனா பாதிப்பு காரணமாக டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மாநிலச் செயலாளராக இருந்த ராஜா கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் டாஸ்மாக் கடை விற்பனையாளராக இருந்த ரவிச்சந்திரனும் உயிரிழந்துள்ளார். டாஸ்மாக் ஊழியர்கள் பலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டாலும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதுதான் காரணம்
இந்த நிலையில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.