×

ரூ.25 கோடி நில மோசடி வழக்கு: கேரளாவுக்கு தப்பி ஓடிய பில்டர் அழகப்பனைத் தூக்கிய தனிப்படை போலீஸ்!

 

நடிகை கவுதமி கடந்த 2004-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது, தனது மகளின் எதிர்கால நலன் கருதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள நிலங்களை விற்பனை செய்யத் தனது குடும்ப நண்பரும் கட்டுமான அதிபருமான சி. அழகப்பனை நம்பி பவர் ஆஃப் அட்டர்னி வழங்கியிருந்தார். ஆனால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கவுதமியின் கையொப்பங்களைப் போலியாகச் தயாரித்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைத் தங்களின் பெயர்களுக்கும் தங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் மாற்றிக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடி குறித்து நடிகை கவுதமி சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில், அழகப்பன், அவரது மனைவி நாச்சல், மகன் சிவா மற்றும் உறவினர்கள் உட்படப் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க கேரளா உள்ளிட்ட இடங்களில் தலைமறைவாக இருந்த அழகப்பன் தரப்பினரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அழகப்பன் உட்பட 3 பேரை நீதிபதி உத்தரவின் பேரில் புழல் சிறையில் காவலில் அடைத்தனர்.

அத்துடன், இந்த நிதி முறைகேடு மற்றும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தொடர்பாக அமலாக்கத்துறையும் (ED) தனியாக வழக்குப் பதிவு செய்து அழகப்பனுக்குச் சொந்தமான சென்னை மற்றும் மதுரை இல்லங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது. ஏமாற்றப்பட்ட தனது 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை மீட்கக் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் நடிகை கவுதமிக்கு ஆதரவாக இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளன.

 ரூ.25 கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் சொத்துகளைப் போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றி விற்பனை செய்த குற்றத்திற்காக, முக்கியக் குற்றவாளியான பில்டர் அழகப்பன் உள்ளிட்ட மூவரைச் மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.