ரூ.1950 கோடி ஃபைபர் ஆப்டிக் டெண்டர் முறைகேடு… 18ம் தேதிக்குள் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு
அ.தி.மு.க அரசு ரூ.1950 கோடி அளவுக்கு ஆப்டிக் கேபிள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க தொடர்ந்த வழக்கில் ஜூன் 18ம் தேதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர், அமைச்சர்கள் டெண்டர் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாக ஆர்.எஸ்.பாரதி புகார் கூறி வருகிறார். இதனால் அவரை கைது செய்து சிறையில் அடைக்க அ.தி.மு.க அரசு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. டான்சி உள்ளிட்ட வழக்குகளில் ஜெயலலிதா சிறை செல்ல ஆர்.எஸ்.பாரதி காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.