×

திருமணத்தில் ரூ.1 லட்சம் மொய் பணம் அபேஸ்: சிசிடிவியால் சிக்கிய ஆசாமி!

கும்மிடிப்பூண்டி அருகே திருமணத்தில் உறவினர் போல நடித்து ரூ.1 லட்சம் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருக்கும் கவரைப்பேட்டை தனியார் மண்டபத்தில் திருமணம் ஒன்று நடந்திருக்கிறது. மணமகன் ஊத்துக்கோட்டை மாம்பாக்கத்தை சேர்ந்த நவீன். மணமகள் ஆந்திர மாநிலம் தடாவை சேர்ந்த பிந்து. இவர்களின் திருமணத்திற்கு வந்த நபர் ஒருவர், மேடையில் மணமக்களின் பின்னால் நின்று கொண்டிருந்துள்ளார். அந்த நபர் அங்கு மொய் பணம் வாங்கிக் கொண்டிருந்த நவீனின் உறவினரிடம்,
 

கும்மிடிப்பூண்டி அருகே திருமணத்தில் உறவினர் போல நடித்து ரூ.1 லட்சம் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருக்கும் கவரைப்பேட்டை தனியார் மண்டபத்தில் திருமணம் ஒன்று நடந்திருக்கிறது. மணமகன் ஊத்துக்கோட்டை மாம்பாக்கத்தை சேர்ந்த நவீன். மணமகள் ஆந்திர மாநிலம் தடாவை சேர்ந்த பிந்து. இவர்களின் திருமணத்திற்கு வந்த நபர் ஒருவர், மேடையில் மணமக்களின் பின்னால் நின்று கொண்டிருந்துள்ளார்.

அந்த நபர் அங்கு மொய் பணம் வாங்கிக் கொண்டிருந்த நவீனின் உறவினரிடம், ‘நான் சாப்பிட்டு வந்து விட்டேன். நீங்கள் சென்று சாப்பிட்டு வாருங்கள்’ என்று கூறியிருக்கிறார். அவர் திருடன் என்பதை உணராத நவீனின் உறவினர், மொய் கவர்கள் பையை அவரிடம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். இதனையடுத்து அந்த நபர், சிறிது நேரம் அங்கேயே இருந்து வரும் மொய் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

சாப்பிடச் சென்ற உறவினர் திரும்பி வந்து பார்த்த போது, அந்த நபர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில், திருமணத்தில் வைக்கப்பட்டிருந்த கேமராவையும் அப்பகுதி இருந்த சிசிடிவி காட்சிகளையும் வைத்து போலீசார் அந்த நபரை கண்டு பிடித்துள்ளனர். உறவினர் போல நடித்து ரூ.1 லட்சம் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.