×

சனாதன முறையில் ஒழுக்கத்தை கற்பித்தவர் திருவள்ளுவர்- ஆளுநர் ரவி

 

பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் கற்றுக் கொடுத்தவர், திருவள்ளுவர் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளத்தில், “பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும்,மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை  வழங்கினார். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார்.