×

காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்தி சென்ற உறவினர்கள்

 

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவரது உறவினர்கள் அடியாட்களுடன் பட்டப் பகலில் வீட்டில் நுழைந்து கத்தி முனையில் பெண்ணை காரில் தூக்கிச் சென்ற காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கண்டன், மற்றும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த ரோஷினி,இருவரும் ஓசூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்த போது பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர் கடந்த ஆண்டு ஜூலை 4-ம்தேதி எடப்பாடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு ஆஜராகி உள்ளனர் அது சம்பந்தமாக எடப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெண்ணின் பெற்றோர்கள் வர மறுத்தால் இருவரும் மேஜர் என்பதால் தனுஷ்கண்டன், குடும்பத்தினருடன் இருவரையும் அனுப்பி வைக்கப்பட்டது.