×

ரெட் அலெர்ட் : சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

 


கனமழை எச்சரிக்கை காராணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்குன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

தென்கிழக்கு வங்கக்கடலில் அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு- வடமேற்கு திசை திசையில் , வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும்  வானிலை மையம் கணித்துள்ளது.   

தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அதிலும் நாளை  (அக்டோபர் 15) மற்றும்  நாளை மறுநாள் (அக்டோபர் 16) ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

அந்தவகையில் கனமழை முன்னெச்சரிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை(  15.10.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  மேலும், நாளை முதல் 18ம் தேதி வரை ஐ.டி.நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.