×

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் : டிசம்பர் 2,3,4 இல் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் !

டிசம்பர் 2,3,4-ம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் வட தமிழகத்திலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும்
 

டிசம்பர் 2,3,4-ம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் வட தமிழகத்திலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புயலாக மாறி, வரும் 2-ம் தேதி இலங்கையில் கரையை கடக்கும் பின்னர் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 2,3, 4 ஆம் தேதிகளில் அதிகன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ள நிலையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தெற்கு வங்கக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.