ராமநாதபுரம் டி.ஆர்.ஓ உள்பட 38 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் கலெக்டர் அலுவலகம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் சென்னை விமானநிலையத்தின் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் பயன்படுத்திய அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு இருந்த வரையில் கொரோனா கட்டுக்குள் இருந்தது, பயணிகள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.