×

ராமேஸ்வரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு

 

ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து  நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படையில் 2500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று கச்சத்தீவு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது  அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள்  மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி  துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர். இதனால் இலங்கை கடற்படைக்கு அஞ்சிய இராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு பத்து ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை நஷ்டத்துடன் இன்று காலை கரை திரும்பி உள்ளனர். 

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது, சிறை பிடிப்பது, விரட்டி அடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது இதனால் ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இலங்கை அரசுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்து வருகிறது இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ராமேஸ்வரம் மீனவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் பிரச்சனை மீன் பிடிக்க மத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இராமேஸ்வரம் மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.