×

ராமநாதபுரம்- மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திவந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எஸ்.பி.பட்டினம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாக்குப்பையில் மறைத்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை கடத்திவந்த அதே பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ்(22),
 

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திவந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எஸ்.பி.பட்டினம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு மோட்டார்

சைக்கிளில் வந்தவர்களை மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாக்குப்பையில் மறைத்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை கடத்திவந்த அதே பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ்(22), சூர்யா(23), ஏழுமலை(22),முத்துராமலிங்கம்(40) மற்றும் பார்த்திபன்(26) ஆகியோரை கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.