த்ரிஷா பிரச்சனையை மறைக்க மடைமாற்றம் செய்கின்றனர் - மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஆவேசம்
ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து சர்ச்சையாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை முழுவதும் ரஜினி ரசிகர்கள் கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
காக்கா குஞ்சுகளுக்கும் கள்ளச் சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் தலைவா,"வேதனை வெட்கம் அவமானம்"
"காலம் பேசாது நிச்சயம் பதில் சொல்லும்"
"களத்தில் சந்திப்போம் கதம் கதம்"
என்ற வாசகங்களோடு ரஜினிகாந்தை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து மதுரையில் மதுரை மாநகர் மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில் மதுரை புதூர் பகுதியில் ரஜினியின் நண்பர் ஓய்வு பெற்ற காவல் துறை ADSP குமரவேல், மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி மதுரை மாநகர் ரஜினி மன்ற நிர்வாகி பால.நமச்சிவாயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் பேசுகையில்,"1996 ல் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வை எதிர்த்து வாதிட்டவர் நடிகர் ரஜினி. புகழின் உச்சத்தை பார்த்தவருக்கு அச்சம் கிடையாது.அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் சீண்டி பார்க்க வேண்டாம். ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் மாமனார் ஓரு கட்சியில் உள்ளார்கள்.ரஜினி யாரையும் பார்த்தும் பயம் கிடையாது.கொரானா காலத்தில் யாரும் பாதிக்கப்பட வேண்டாம் என வரவில்லை.உங்கள் பேட்டி உங்களுக்கு எதிர்வினையை ஆக்கி விடும்.
திரிஷா பிரச்சனையை மறைக்கவே ரஜினி பற்றி பேசி மடைமாற்றம் செய்ய ஆதவ் முயற்சி செய்கிறார்.ரஜினி தமிழகத்தில் கம்பி இல்லாத மின்சாரம்.விஜய் முதல்வராக ஆசைபடுகிறார்.
ஆதவ் சர்வ கட்சிக்கு போகிறவர்.விஜய் மாற்றம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? விஜய் கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் ஆதவ் நிற்கும் தொகுதியில் ரஜினி அனுமதியுடன் சாதாரண தொண்டனை நிறுத்தி தோற்க்கடிப்போம்.ஆதவ் மீது விஜய் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிதாக கட்சி துவக்கியவர்கள் எந்த உயிரிழப்பு இல்லாமல் கற்று கொள்ளுங்கள்" என்றனர்.