×

ஆ.ராசா மனைவி மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மனைவி நேற்று உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மனைவி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “உங்கள் மனைவி மரணம் அடைந்தார் என்பதை அறிந்து பெரும் துயரம் அடைந்தேன். அன்புக்குரியவரை
 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மனைவி நேற்று உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மனைவி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “உங்கள் மனைவி மரணம் அடைந்தார் என்பதை அறிந்து பெரும் துயரம் அடைந்தேன்.

அன்புக்குரியவரை இழந்த உங்களின் துக்கம் எனக்கு புரிகிறது. உங்கள் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளில் அவர்கள் உங்களுக்கு அளித்த ஆதரவு இந்த வேதனையையும் தாங்கும் வலிமையை தரும் என நம்புகிறேன். அவரை இழந்ததால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வேதனையை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. என்உளப்பூர்வமான இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியை இழந்துவாடும் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்