×

புதுச்சேரியில் மீண்டும் அதிகரித்த கொரோனா.. புதிதாக 1,271 பேருக்கு தொற்று உறுதி..

 

புதுச்சேரியில் புதிதாக 1,271 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

புதுச்சேரியில் இந்த மாத தொடக்கத்திலிருந்தே கொரோனா பரவல் அதிகரித்தே காணப்படுகிறது.  நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 940 ஆக  சற்று குறைந்த நிலையில்,  இன்று மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் புதுவையில்  புதிதாக 1,271  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்ந்து  புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,969  ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,911 ஆக உயர்ந்துள்ளது.  அதே சமயம் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,724 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த வாரங்களில்  ஆயிரத்தில் இருந்த , தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுளின் எண்ணிக்கை  இன்று கனிசமாக உயர்ந்திருக்கிறது.  

இதன் மூலம் புதுச்சேரியில்   கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,42, 755 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது புதுச்சேரியில் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் 14,293 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு புதிதாக 4,714 பேருக்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. .