×

இனி டெலிவரி பாய் வேலைக்கு நன்னடத்தை சான்று அவசியம் – சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

சென்னையில் டெலிவரி ஊழியர்களாக வேண்டுமானால் நன்னடத்தை சான்று அவசியம் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். சமீப காலமாக, சென்னையில் நடக்கும் குற்ற சம்பவங்களில் அதிகளவு டெலிவரி ஊழியர்களே ஈடுபடுகின்றனர். சிலர் டெலிவரி பாய் என பொய்யாக கூறியும், சிலர் முன்னாள் வேலை பார்த்த நிறுவனங்களின் பெயரைக் கொண்டும் திருட்டு சம்பவங்களை செய்து வருகின்றனர். அண்மையில் சென்னையில் சிக்கிய ஒரு திருட்டு கும்பலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்களுள் பலர் டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றி வருவதும்
 

சென்னையில் டெலிவரி ஊழியர்களாக வேண்டுமானால் நன்னடத்தை சான்று அவசியம் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

சமீப காலமாக, சென்னையில் நடக்கும் குற்ற சம்பவங்களில் அதிகளவு டெலிவரி ஊழியர்களே ஈடுபடுகின்றனர். சிலர் டெலிவரி பாய் என பொய்யாக கூறியும், சிலர் முன்னாள் வேலை பார்த்த நிறுவனங்களின் பெயரைக் கொண்டும் திருட்டு சம்பவங்களை செய்து வருகின்றனர்.

அண்மையில் சென்னையில் சிக்கிய ஒரு திருட்டு கும்பலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்களுள் பலர் டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றி வருவதும் இரவு நேரங்களில் உணவு டெலிவரி எனக்கூறி கொள்ளையடிப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், டெலிவரி ஊழியராக இனிமேல் காவல்துறையிடம் இருந்து நன்னடத்தை சான்று கட்டாயமாக பெற வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் புதிதாக பணியமர்த்தும் நபர்களிடம் நன்னடத்தை சான்று பெற வேண்டும் என்றும் CCTNS மூலம் சான்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.