இளையராஜா மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறைக்கு கடும் கண்டனம் - பூவை ஜெகன் மூர்த்தி!
இசைஞானியின் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்த இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. கருவறைக்குள் அனுமதிக்கப்படாமலேயே வாசலில் நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார். கோயிலின் கருவறைக்குள் நுழைவதற்கு தகுதி வைத்துக் கொள்ளும் பார்ப்பனர்கள், ஏனைய சமூக மக்களை இழிவாக நடத்துவது தொடர்ந்துக் கொண்டேயிருக்கிறது. தனக்கு அர்ச்சனை செய்வதற்கும், தொட்டு தரிசனம் செய்தவற்கும் பார்ப்பனர்கள் மட்டும் தான் தேவை என கடவுள் கூறியதா.? இத்தகைய சாதிய படிநிலைகளால் உருவாக்கப்பட்ட வழிபாடுகளால் தான் கடவுளே வேண்டாம் என பெரியார் கூறினார்.