×

கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் பொன்னார்!

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆறாம் தேதி முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலம்பெற கன்னியாகுமரில்
 

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆறாம் தேதி முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் நலம்பெற கன்னியாகுமரில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விஜய் வசந்த் எம்பி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறினர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சூழலில் எட்டு நாட்களுக்குப் பிறகு அவர் குணமடைந்துள்ளார். தற்போது பொன்.ராதாகிருஷ்ணன் வீடு திரும்பியுள்ளார்.