×

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு : கொடைக்கானலில் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஜெரினா பேகம். இவரது வீட்டில் நேற்று தீப்பற்றி எரிந்ததாக தெரிகிறது. இதுகுறித்து உடனே அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஜெரினா பேகம் உடல்கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ பற்றியது எப்படி?
 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஜெரினா பேகம். இவரது வீட்டில் நேற்று தீப்பற்றி எரிந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து உடனே அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஜெரினா பேகம் உடல்கருகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ பற்றியது எப்படி? இந்த விவகாரம் தற்கொலையா? விபத்தா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.