×

பாக்யராஜ் உடலுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை

 

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் கிராமத்தில் 1953 ஆம் ஆண்டு பிறந்தவர் பாக்யராஜ். 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர். "சுவர் இல்லாத சித்திரங்கள்" படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாக்யராஜ். 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள பாக்யராஜ், 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர் நடித்து பாதியில் கைவிடப்பட்ட படத்தை "அவசர போலீஸ் 100" என இயக்கி நடித்தார் பாக்யராஜ். இவருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்தவர் இயக்குநர் பாக்யராஜ். அதிமுகவில் இணைந்து, பின்னர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2006ல் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த பாக்யராஜ், பின்னர் அதிலிருந்தும் விலகினார். 1988 ஆம் ஆண்டு முதல் பாக்யா எனும் வார இதழையும் நடத்தி வந்தார். பாண்டியராஜன், பார்த்திபன் போன்ற திறமையான இயக்குநர்களை உருவாக்கியவர் பாக்யராஜ். "இது நம்ம ஆளு" படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமான பாக்யராஜ் நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.