பாஜக தலைவர் முருகன் மீது போலீஸ் வழக்குப்பதிவு!
எல்.முருகன் மீது கள்ளக்குறிச்சி , தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு தியாகதுருகத்தில் கட்சி சார்பில் வரவேற்பும், கள்ளக்குறிச்சியில் பாஜக அலுவலக திறப்பும் சமீபத்தில் நடந்தது. கொரோனா ஊரடங்கை கருத்தில் கொள்ளாமல் இந்த நிகழ்வில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறி
Sep 1, 2020, 08:37 IST
எல்.முருகன் மீது கள்ளக்குறிச்சி , தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு தியாகதுருகத்தில் கட்சி சார்பில் வரவேற்பும், கள்ளக்குறிச்சியில் பாஜக அலுவலக திறப்பும் சமீபத்தில் நடந்தது. கொரோனா ஊரடங்கை கருத்தில் கொள்ளாமல் இந்த நிகழ்வில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.