ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது யார்? கண்டுபிடிக்க கோரி பாமக நிர்வாகி புகார்
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார் என்பதை கண்டறிய வேண்டும் என்று விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார் லைகா நிறுவன சிம் இருந்ததாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் க்கும் அன்புமணி ராமதாஸ் இருக்கும் உட்கட்சி மோதல் ஏற்பட்டு இருவரும் இரு அணியாக செயல்பட்டு வரும் நிலையில், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டு இருந்ததாக மருத்துவர் ராமதாஸ் கடந்த 11ஆம் தேதி விருத்தாசலத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 12ஆம் சென்னையை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரிகள் ஐந்து பேர் பாமக நிறுவனமர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தை முழுமையாக சோதனையிட்டனர். தனியார் துப்பறியும் நிறுவனம் ஒட்டு கேட்பு கருவியை ஆய்வு செய்தனர். ஒட்டு கேட்பு கருவி குறித்து ஆய்வறிக்கை வந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பாமகவின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவு கூடுதல் எஸ் பி தினகரனிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் அவருடைய இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைத்தது யார் என்பதை கண்டறிய வேண்டும் என்றும் லைகா நிறுவன சிம் கார்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டு கேட்பு கருவியை நூறு மணி நேரத்திற்கு ஒருமுறை சார்ஜ் செய்ய வேண்டுமென ஆய்வு செய்த தனியார் நிறுவன அதகாரிகள் தெரிவித்ததாக அன்பழகன் தெரிவித்துள்ளார். ஓரீரு நாட்களில் தைலாபுரம் டாக்டர் ராம்தாஸ் இல்லம் சென்று சைபர் க்ரைம் போலிசார் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது