பாமக எம்எல்ஏக்களுடன் அன்புமணி அவசர ஆலோசனை
Oct 17, 2025, 19:50 IST
சட்டமன்றத்தில் சபாநாயகர் பேச வாய்ப்பு வழங்காத நிலையில் பாமக எம்.எல்.ஏக்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
சட்டமன்றத்தில் சபாநாயகர் பேச வாய்ப்பு வழங்காத நிலையில் பாமக எம்.எல்.ஏக்களுடன் பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சபாநாயகர் அனுமதி மறுத்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகவும் அன்புமணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத்தில் அன்புமணி தரப்பு பாமக எம்.எல்.ஏக்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் சபாநாயகர் ஏற்கவில்லை.