திருவள்ளுவரின் போதனைகள் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது - பிரதமர் மோடி
Jan 16, 2024, 11:40 IST
காலத்தால் அழியாத திருவள்ளுவரின் போதனைகள், நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது.