ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம்: மோடி
Feb 24, 2025, 19:10 IST
பல சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெ ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். கருணை உள்ளம் கொண்ட தலைவர் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த நிர்வாகி என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.