×

மேற்காசியா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

 

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் ஓயவில்லை. நாள்தோறும் ஈரானுக்கு எதிரான தாக்குதலை இவ்விரு நாடுகளும் தீவிரப்படுத்தி வரும் சூழலில், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், போர் சூழல் நிலவும் மேற்காசியாவில் தற்போதைய நிலவரம் குறித்து 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த 48 மணி நேரத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிபர், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் கத்தார், பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

மேலும், போர் சூழலுக்கு மத்தியில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஆலோசனையின்போது பிரதமர் மோடி வலியுறுத்தியதாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.