மனதின் குரல் நிகழ்ச்சியில் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
Dec 31, 2023, 13:16 IST
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீரமங்கை வேலுநாச்சியாருக்கு புகழாரம் சூட்டினார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய, தேசத்தின் பல மகத்தான ஆளுமைகளில் இராணி வேலு நாச்சியாரும் ஒருவர். ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் சிவகங்கை சமஸ்தானத்தின் மீது போர் தொடுத்த போது, அந்தப் பகுதியின் அரசராக விளங்கிய வேலு நாச்சியார் அவர்கள் கணவர் கொலை செய்யப்பட்டார். இராணி வேலு நாச்சியாரும் அவருடைய மகளும் எப்படியோ எதிரிகளிடமிருந்து தப்பினார்கள். பிறகு முழுத் தயாரிப்போடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் புரிந்தார். மிகவும் நெஞ்சுரத்தோடும் உறுதிப்பாட்டு சக்தியோடும் போரிட்டார்.