×

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு பிளாட்டினம் பசுமை சான்றிதழ்!!

 

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு பிளாட்டினம் பசுமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) ஒரு பகுதியான இந்திய பசுமை கட்டுமான கவுன்சில்(IGBC) 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, 2025 ஆம் ஆண்டிற்குள் நிலையான கட்டட சூழலைஉருவாக்குவதே IGBC-இன் நோக்கமாகும். பசுமை கட்டுமான இயக்கத்தின் வளர்ச்சி காரணமாக, IGBCபுதிய மற்றும் தற்போதுள்ள கட்டிடங்கள், உட்புறங்கள், சுகாதாரம், பள்ளிகள், தொழிற்சாலை கட்டிடங்கள், பசுமை நகரங்கள், இயற்கைக்காட்சிகள் மற்றும் வெகுஜன விரைவு போக்குவரத்து முறை ஆகியவற்றிற்கானபிரிவுகள் தொடங்கப்பட்டன. ​

இந்திய பசுமை கட்டுமான கவுன்சில் (IGBC) இரயில் அடிப்படையிலான MRTS இன் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டில் பசுமை கருத்துகளை ஊக்குவிப்பதற்காக IGBC Green Mass Rapid Transit System மதிப்பீட்டு முறையை தொடங்கியது. இந்த மதிப்பீட்டு முறை, தள தேர்வு மற்றும்திட்டமிடல், நீர் திறன், எரிசக்தி திறன், பொருள் பாதுகாப்பு, உட்புற சூழல், வசதி, வடிவமைப்பு மற்றும்கட்டுமானத்தில் புதுமை ஆகியவற்றில் அவற்றின் பசுமை அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு MRTSதிட்டங்களை மதிப்பீடு செய்கிறது.

இந்தியாவின் மிக உயர்ந்த பசுமை கட்டுமான திட்டமான IGBC சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்பில் உள்ள 40 மெட்ரோ இரயில்நிலையங்களுக்கும் பிளாட்டினம் மதிப்பீட்டின் மிக உயர்ந்த தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது. (21 உயர்நிலைமெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் 19 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள்). 

நவம்பர் 25, 2023 அன்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், சர்வதேச மற்றும்தேசிய பார்வையாளர்கள் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக திட்டஇயக்குநர் திரு. டி.ஆர்ச்சுனன் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.என்று குறிப்பிட்டுள்ளார்.