×

பேரூர் திமுக சார்பில் அமித் ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூர் திமுக சார்பில் அமித் ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நாடாளுமன்றத்தில்’ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொன்னால் கூட சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம்  உடையார்பாளையம் பேரூர் திமுக சார்பில் அமித் ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதேபோல் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.