இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 10 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல் புதுச்சேரியிலும் இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்களை திறக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
Apr 10, 2021, 20:51 IST
தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 10 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதேபோல் புதுச்சேரியிலும் இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்களை திறக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதி வழங்கியுள்ளார். சமயப் பெரியோர்களுடனான ஆலோசனைக்கு பின் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் வழிபாட்டு தலங்களில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.