×

“பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல; ஒரு இனத்தின் தலைவர்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி அவமதித்துள்ளனர். இதற்கு திமுக, திக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில்
 

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி அவமதித்துள்ளனர். இதற்கு திமுக, திக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்! பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே திமுக எம்பி கனிமொழி பெரியார் சிலை அவமதிப்புக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.